Tuesday, June 23, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று,"
என்று அனைவரும் அறிவோம். குழந்தைக் கோபமே வேடிக்கையாய்த் தான் இருக்கிறது. எல்லாவற்றையும் விட வேடிக்கையானது அதுக்கு நாம் மருந்து கொடுத்தால் கோவிச்சுக்கிறது தான். உடம்பு சரியில்லாமல் இருந்தால் தான் மருந்து கொடுக்கிறோம். ஆனால் அதுவோ அப்போ நம்மளைக் கோவிச்சுக்கிறது. "போ"னு தள்ளிவிடுகிறது. சின்னப் பிஞ்சு விரலைச் சுட்டி மிரட்டுகிறது. அடுத்த நிமிஷமே கூப்பிட்டால் ஓடியே வருகிறது.மருந்து கொடுத்ததே மறந்து போயிடறது. எல்லாருமே இப்படி இருந்தால் எப்படி இருக்கும்??? அதிலும், இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டுனா உடனேயே ஓடி வருகிறது. "பி கா பூ" என்று அதற்குத் தெரிந்த முறையில் நாம முகத்தை மூடிக் கொண்டு குரல் கொடுத்தால் போதும், "ஐ சீ யூ" என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்துடுகிறது.

தினமும் ஸ்வாமிக்குக் கோலம் போடும்போது மெனக்கெட்டு வந்து அழிச்சுட்டு, உம்மாச்சி கோலம் அழிக்கக் கூடாதுனு சொன்னால், "உம்மாச்சி??" என்று கேட்டுட்டு, "ஐ ஸோ சாரி, உம்மாச்சி, ஐ டிட்ன் மீன் து! ஐ தாமஸ்" என்று சொல்லுகிறது. ஐ தாமஸ்= என்றால் ஐ ப்ராமிஸ்னு எடுத்துக்கணும். சொல்லிட்டு உடனேயே வேகம் வேகமாய் கோலமும் அழிக்கப் பட்டு க்ளீன் பாருனு நமக்குச் செய்தியும் கொடுத்துடும். கோபம் என்பதெல்லாம் நிமிஷத்தில் மறைந்து போகிறது. இப்போ இதைச் சொல்ல வந்ததே வேறே ஒரு விஷயத்துக்காக. சில குழந்தைகளின் கோபம் சிலருக்கு ஆச்சரியம் ஊட்டுவதாய்ச் சொல்லிக் கேட்டிருக்கேன். அதிலும் கோபப் பார்வை ரொம்ப ஆச்சரியமும், உடலில் ஒரு நடுக்கமும் ஏற்பட்டதாய்ச் சொல்லியும் கேட்டிருக்கேன், படிச்சிருக்கேன். படித்த ஒரு நாவல் சுருக்கம் கீழே. வருஷங்கள் பல ஆகியும் இந்தக் கதையின் தாக்கம் என்னிடம் இருந்து இன்னும் போகலைனே சொல்லணும். ஆங்கிலக் கதை என்பதோடு கதைக்களமும் இங்கிலாந்து தான்.

பல வருஷங்கள் முன்னே, பையர் சிநேகிதர் ஒருத்தர் கொடுத்த ஆங்கிலக் கதைப் புத்தகம் அது. கணவன், மனைவி, மகிழ்வான இல்வாழ்க்கை. இங்கிலாந்தின் கிராமப் புறத்தில் சொந்த வீடு, நாலு குழந்தைகள். நாலாவது குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன சமயம், ஒருநாள் நல்ல மழை பெய்யும் நேரம் ஒரு கர்ப்பிணிப் பெண் அங்கே மழைக்கு ஒதுங்குகின்றாள். கணவனுக்கு அவளைப் பார்க்கும்போது ஏனோ மனம் அவள் தங்கஇடம் கொடுக்கவேண்டாம் எனச் சொல்லுகின்றது. மனைவியோ நிறை கர்ப்பிணி, உதவவேண்டும் என மனிதாபிமானத்தோடு உதவுகின்றாள். இரவு அனைவரும் படுக்கச் செல்லுகின்றனர்.

மறுநாள் காலை அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் காணவில்லை. மனைவியோ என்ன ஆச்சோ, ஏது ஆச்சோனு தவிக்கிறாள். கணவனுக்கு ஒரு பக்கம் நிம்மதினு தோணினாலும் இனம் புரியாத தவிப்பும் கூட. அப்போது அங்கே குழந்தை அழும் சப்தம் கேட்க, தங்கள் நாலாவது குழந்தை என நினைச்சு இருவரும் போய்ப் பார்க்க அது தூங்கிக் கொண்டிருக்கிறது. பின்னே அழுதது யார்? சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் கர்ப்பிணிப் பெண் தங்கி இருந்த அறையைப் போய்ப் பார்த்தால் ஓர் இடத்தில் துணிக்குவியலில் ஓர் பெண்குழந்தை அழுது கொண்டு கிடந்தது. இயற்கையான தாய்மை உணர்வு உந்தித் தள்ள மனைவி அந்தக் குழந்தையை எடுத்து அணைக்கக் குனிந்தாள். அதன் கண்களைப் பார்த்த கணவனுக்கோ ஏதோ தயக்கம். இந்தக் குழந்தை நம் குடும்பத்தை உருக்குலைக்கப் போகின்றது என்ற உணர்வு அவனிடம். மனைவியைத் தடுக்கிறான்.

4 comments:

  1. கதை அம்புட்டு தானா..!! ரைட்டு ;)

    என்ஜாய் பண்ணுங்க தலைவி ;)

    ReplyDelete
  2. கோபி, மேல்பாதி சுயபுராணம் கீழே கதை தனியா இருக்கு, கதை தொடருகிறது.

    ReplyDelete
  3. Neengalum thodarkathai ezthutan arambichacha? super.....

    ReplyDelete
  4. வாங்க புலி, இது ஒண்ணும் நான் சொந்தமா எழுதறதில்லை. எப்போவோ படிச்சதை நினைப்பு வச்சுட்டு எழுதறேன். அம்புடுதேன்!!!!!!! :)))))

    ReplyDelete