Monday, June 30, 2008

மன ஆறுதலுக்கு ஒரு மொக்கை!!!!!

என்னமோ தெரியலை, இந்த ப்ளாகர் இன்னும் என் கிட்டே ஓர வஞ்சனையோடத் தான் இருக்கு. :P அதிலேயே மீண்டும் ஒரு பதிவு திறக்கலாம்னு போனேன். எல்லாம் இந்த சிஷ்யகேடிங்கள் எல்லாம் மொக்கை போட அலையுதே, அதுக்காகத் தான். அவங்க விருப்பத்தையும் நிறைவேற்றினாப்போல இருக்கும், நாமளும், அங்கே, இங்கேனு அலையாமல் ஒரே இடத்திலே மொக்கையும் போட்டுக்கலாம், பக்கத்திலேயே வேணும்கிற ஆன்மீகமோ, தத்துவமோ, எதுவேணாலும் எழுதிக்கலாம்னு பார்த்தேன். ஆனால், இந்த ப்ளாகர் கடைசி வரை ஒத்துக்கவே இல்லை. குமரனுக்கோ, அல்லது 13-ம் ஆழ்வாருக்கோ மட்டும்தான் இஷ்டத்துக்கு ஏத்திக்கிற உரிமை இருக்குனு சொல்லிடுச்சு! என்னடானு யோசிச்சேன், புது வீடு என்னமோ இருக்கு, ஆனால் பூமிதானமா வாங்கினது. வேறொருத்தர் பரிசாக் கொடுத்தது. அங்கே போய் மொக்கை போடக் கஷ்டமா இருக்கே?? என்னத்தைச் சொல்றது? மொக்கை எழுதச் சொல்லி நாளுக்கு நாள் சிஷ்யகேடிங்க விண்ணப்ப மனு அதிகம் ஆயிட்டே இருக்கே???

எப்படியாவது அவங்க ஆவலை நிறைவேத்தணும்னு ஆரம்பிச்சது தான் இது. அதே சமயம் நடு நடுவிலே கொஞ்சம் விஷயமும் தானம் செய்யணுமே??? ஊரெல்லாம் சுத்திட்டு அதைப் பத்தி எழுதாமல் இருக்கிறதும் சரியாப் படலை. சிலருக்கு போரடிச்சாலும், ஊர் சுத்தும்போது நடக்கும் விஷயங்களின் சுவைக்கு ஈடு, இணை இல்லை அல்லவா? அதான் தனிக் கடை போட்டுடலாம்னு போட்டாச்சு. ஆனால் யாரையும் கூப்பிடலை, பின்னூட்டத்தை வச்சு திவா வந்துட்டுப் போயிருக்கார். அம்பி கண்டு பிடிச்சாச்சு, கேஆரெஸ்ஸும் கண்டு பிடிச்சாச்சு, ஆனால் நான் கூப்பிடணும்னு பார்க்கிறாங்க போலிருக்கு! மெதுவா வரட்டும், யாரும் பின்னூட்டம் கொடுக்கலைனால், ஒருத்தரும் படிக்கலைனு அர்த்தம் இல்லை, அது தெரியும், அதனால் மெதுவா, வந்து பின்னூட்டம் கொடுக்கட்டும்னு இருக்கேன்.

எல்லாம் இப்போ சங்கிலித் தொடர், வளையல் தொடர், நெக்லஸ் தொடரில் பிசியா இருக்காங்க. எல்லாம் முடிஞ்சு வந்து பார்க்கட்டும். பல இடங்களுக்கும் இந்த ஆறு மாசமாப் போயிட்டு வந்தாச்சு, ஆனால் அது பத்தி ஒண்ணும் எழுத முடியலை. நேரம் எப்படிக் கிடைக்குமோ தெரியலை. இப்போ ப்ளாகர் மட்டுமில்லாமல், மீண்டும் இணைய வேதாளமும் முருங்கை மரத்தில், மழைக்காலம் வந்தால் எனக்கு இழுக்குமோ இல்லையோ என் இணையம் இழுக்கும். எப்போ வருமோ தெரியாது. ஆகவே மன ஆறுதலுக்கு ஒரு மொக்கை! அப்பாடா, தலைப்புக்கும், இதுக்கும் ஒருமாதிரி சம்மந்தம் கொண்டு வந்துட்டேன்!!! வர்ட்டாஆஆஆஆ???? நாளைக்கு வரமுடியுமோ, இல்லையோ தெரியலை! :(((( அதுவரை எஞ்சாய்!!!!!!!!!

3 comments:

  1. /
    எல்லாம் இப்போ சங்கிலித் தொடர், வளையல் தொடர், நெக்லஸ் தொடரில் பிசியா இருக்காங்க. எல்லாம் முடிஞ்சு வந்து பார்க்கட்டும்.
    /

    எந்த தொடர்ல இருந்தாலும் மொக்கைக்கு முதல் மரியாதை!!

    ReplyDelete
  2. அட, மங்களூர்த் தாத்தா, வாங்க, வாங்க,இவ்வளவு தூரம் வந்து வாழ்த்தினதுக்கு நன்னிங்கோ!!!

    ReplyDelete