Wednesday, July 9, 2008

சினிமா விமரிசனம் எழுதி இருக்கேனே?


யோசிச்சுட்டு, இப்போ எல்லாரும் சினிமா விமரிசனம், அது, இதுனு தூள் கிளப்பறாங்க. நாமளும் எழுத வேண்டாமா?னு எழுத ஆரம்பிச்ச விமரிசனம் இது. நான் சமீபத்தில் பார்த்த படம் "உம்ராவ் ஜான்". ரொம்பவே புதுசு இல்லை?? :P நிஜமாவே இந்த உம்ராவ் ஜான் ரொம்பவே புதுசு தான். ஐஷுவும், அபிஷேக்கும் நடிச்சது. ஐஷுதான் உம்ராவ் ஜான். அபிஷேக் தான் அவங்க காதலன். சும்மா தூள் கிளப்பி இருக்காங்க இரண்டு பேரும். பத்தாதுக்கு சுனில் ஷெட்டி(???) பார்த்தா அவர் மாதிரித் தான் இருக்கு. ஷபனா அஸ்மி இரண்டு பேரும் நல்லா நடிச்சிருக்காங்க. அதிலும் தான் பிறந்து வளர்ந்த வீட்டை உம்ராவ் ஜான் மீண்டும் பார்க்க வரும் காட்சியில் ஐஷு ரொம்பவே உருக்கிட்டாங்க. அதிலும் அம்மா கிட்டே கெஞ்சும்போதும், தம்பியிடம் ஒரு காலத்தில் உயிராய் இருந்த தம்பி கிட்டே தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போதும், பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து மீண்டும் நாட்டிய நங்கையாக ஆட வரும்போது, கூடி இருக்கும் அனைத்து ஆண்களும் பேசுவதைக் கேட்டு மனம் நொந்து பாட்டிலேயே பதில் சொல்வதும், அந்தப் பாட்டும், ஆட்டமும் முடிந்ததும் ஏற்படும் மெளனமும், அருமை!

கண்ணும், உதடும், முகத்தின் ஒவ்வொரு தசையும் அருமையாக நடிக்கின்றது. உம்ராவ் ஜானாக வாழ்ந்தே காட்டி விட்டார். இதே ஐஷு தானா தேவதாஸில் அத்தனை மோசமாய் நடிச்சது?? ரொம்ப ஆச்சரியமா இருந்தது. இதே படம் ரேகா நடிச்சு வந்ததும் பார்த்திருக்கேன். ரேகாவின் நடிப்புக்கு ஈடு கொடுக்கும் விதத்திலே நடிச்சிருக்கார் ஐஸ்வர்யாவும். இம்மாதிரியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களிலே நடிச்சதிலே ருதாலியில் டிம்பிள், ஜுபைதாவில், கரிஷ்மா, மீண்டும் ஷக்தியில் கரிஷ்மா தான், இவ்வளவு அருமையான நடிப்புக் காட்டி இருந்தார்கள். அதிலும் ஷக்தியில் கரிஷ்மா குழந்தையைப் பிரிஞ்சு துடிக்கும் காட்சி ஒண்ணு போதும். என்ன, ஹிந்திப் படம் பத்தியே எழுதறேன்னு பார்க்கிறீங்களா? தமிழ்ப்படம் நான் பார்த்த சானல்களில் எல்லாம் நல்ல படமாவே இல்லை. எல்லாம் பாடாவதிப் படம். ஒண்ணிலே சபாபதினு ஒரு படம், மத்ததிலேயும் வேறே ஏதோ பழைய படங்கள், செளகார் ஜானகி கண்ணில்லாத பெண்ணாக நடிக்கும் படம் ஒண்ணு, பேர் என்ன? தெரியலை, மறந்துட்டேன்! சரி, வேண்டாம், பார்த்த படமா இருந்தாலும் உம்ராவ் ஜானே தேவலைனு அங்கே போய் செட்டில் ஆகிட்டேன்.

பொதிகை சானலில் இப்போ நிகழ்ச்சிகள் கொஞ்சம் தடுமாறுது, என்னனு புரியலை! காலம்பர 6-30-க்கும், சாயந்திரம் 6-30-க்கும் வேளுக்குடியின் நிகழ்ச்சி தவிர வேறே ஒண்ணும் சுகமாய் இல்லை. மற்றதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் பார்க்கிறாப்போல இருக்கிறதில்லை. அதிலும் இந்த சாமி படங்கள், சீரியல்கள்னு வந்தால் எங்கே இருக்கும் கொஞ்ச நஞ்ச பக்தியும் போயிடுமோனு பயம் வந்துடுது. அதனால் அதெல்லாம் கிட்டேயே போகிறதில்லை.
*************************************************************************************

மேடம், உங்களுக்கு என்ன உடம்பு சரியில்லையா?இது சிலர் கேள்வி!
கீதாம்மா, என்ன ஆச்சு? இதுவும் சிலர் கேள்வி??
கீதாக்கா, என்ன திடீர்னு இப்படி ஆயிட்டீங்க? இதுவும் சிலர் கேள்வி!
கீதா, என்னம்மா ஆச்சு? ஹிஹிஹி, இதுவும் சிலர் கேள்வி!

இப்படி எல்லாரும் கேட்கும்படியான அந்தக் காரணம் தான் என்ன?

தொலைபேசியில் பேசினாலும் இதே கேள்வி தான், சாட்டிங்கிலும் இதே கேள்வி தான், அந்தக் கேள்வி என்ன? யாராலயும் கண்டு பிடிக்க முடியலை! ம்ம்ம்ம்ம் சரி, சரி, நானே சொல்லறேன், ஆனால் அதுக்கு முன்னாலே ஒரு சான்ஸ்! யாரானும் கண்டு பிடிக்கிறாங்களானு பார்ப்போம்! மற்றக் கேள்விகள் இதோஇங்கே பதில் சொல்லுங்கப்பா!!!!!! இந்நேரம் என்னோட உபிச இருந்திருந்தா நடக்கிற கதையே வேறே! ம்ம்ம்ம்ம் அவங்க இல்லாம எவ்வளவு கஷ்டமா இருக்கு? :P :P

No comments:

Post a Comment