Friday, October 30, 2009

என் பயணங்களில் - கச்சி ஏகம்பன் 2


இப்போ இருக்கும் மாமரம் பழைய மாமரம் இல்லைனு ஆதாரபூர்வமாய்த் தெரிய வந்தது. ஆனாலும் இதன் பழங்களும் வித்தியாசமான சுவையோடு இருக்கு, பழைய மரத்தின் கிளை அல்லது விதையிலிருந்து வந்ததுனு சொல்றாங்க. இந்த விஷயம் எனக்குப் புதுசு. போகட்டும். மூலவர் தழுவக் குழந்த நாதரையும், மூலஸ்தானத்திலேயே அம்மன் ஈசனை அணைத்த கோலத்திலேயே லிங்கம் காட்சி கொடுப்பதையும் கவனித்துத் தரிசனம் செய்யவேண்டும். அம்பாளே பிரதிஷ்டை செய்த மணல் லிங்கம் என்பதால் இந்த லிங்கத்திற்கு தேவிக லிங்கம் என்று பெயர். அபிஷேஹம் கிடையாது. காமாக்ஷி அம்மன் கோயிலின் ஸ்ரீசக்ரத்தை ஈசனை ஸ்தாபனம் செய்யச் சொன்னாளாம் அம்பிகை. முதன்முதல் இங்கே ஸ்ரீசக்ரம் ஸ்தாபனம் செய்தது ஈசனே என்றும், அம்பாளே இந்தப் பீடத்திற்குக் காமகோடி பீடம் என்ற பெயரில் விளங்கட்டும் என்று சொன்னதாகவும் தெரியவருகிறது. பூஜை முறைகளும் துர்வாச வடிவத்தில் ஈசனையே வகுத்துக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டாள் என்கின்றனர். ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே காமாக்ஷி கோயிலில் வழிபாடுகள், ஆராதனை எல்லாம் நடக்கும். இந்த ஸ்ரீசக்ரம் கிருத யுகத்தில் துர்வாசரும், த்ரேதாயுகத்தில் பரசுராமரும், த்வாபர யுகத்தில் தெளம்யரும், கலியுகத்தில் ஆதிசங்கரரும் பொலிவூட்டி வழிபட்டிருக்கின்றனர்.

பொதுவாக சிவசக்தி பிரிவதில்லை என்பதால் எல்லாச் சிவன் கோயில்களிலும் லிங்கத்தின் பக்கம் அம்மன் இருப்பது ஐதீகம். ஆனால் ஏகாம்பரேஸ்வரரின் லிங்கத்திலேயே அம்மனும் சேர்ந்து காட்சி கொடுக்கிறாள். அதோடு காஞ்சியில் எந்தச் சிவன் கோயிலிலும் அம்பிகை சந்நிதி கிடையாது. சிற்பங்களும், அழகாய் இருந்தாலும் படம் எடுப்பது தடை செய்யப் பட்டுள்ளது. வாரம் ஒருநாள் அம்மன் ஈசனைத் தழுவிய கோலம் தெரியும்படியான கவசத்தினால் அலங்கரிக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். உற்சவ அம்மனுக்கு ஏலவார் குழலி என்று பெயர். இந்தக் கோயிலில் தற்சமயம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் முன்னாட்களில் நூற்றுக் கால் மண்டபமாக இருந்து, பின்னர் பிற்காலச் சோழர்களால் ஆயிரக்கால் மண்டபமாய் மாற்றப் பட்டது என்றும் சொல்கின்றனர். தற்சமயம் காணப்படும் தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப் பட்டது என ஒரு கல்வெட்டுக் கூறுவதாயும் தெரியவருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு கண் பார்வை இங்கே கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.

இங்கே உள்ள கொடிமரத்தின் முன்னே, சிவகங்கை தீர்த்தத்தின் தென்கரையில் உள்ளது கச்சிமயானம் எனச் சொல்லப் படும் சந்நிதி. இங்கேதான் யாகசாலையில் பண்டாசுர வதம் நடந்தது எனச் சொல்லப் படும். சிவகங்கைத் தீர்த்தமே அம்மனும் ஈசனும் வளர்த்த நெய்க்குண்டம் தான் என்று சொல்லுகிறார்கள். இந்தக் கச்சி மயானத்தின் லிங்கத் திருமேனி யாகசாலை நெருப்பிலிருந்து உண்டானது என்றும் சொல்கின்றனர். இங்கே உள்ள விநாயகர் விகட சக்ர விநாயகர் என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். வெளிப்பிராஹாரம் பெரியதாய் உள்ளது. நாங்க நிறையத் தரம் வந்து சுத்தி இருப்பதாலும், மேலும் பார்க்க, நடக்க நிறைய இடங்கள் இருப்பதாலும் வெளிப்ரஹாரம் சுத்தவில்லை. வெளியே வந்து வண்டி இருக்குமிடம் தேடினோம். நம்ம ஆகிரா இருக்கும் தெருவில் தான் வண்டியை நிறுத்தி இருந்தாங்க. அங்கே போய் உட்கார்ந்து கொண்டு மத்தவங்க வரதுக்குக் காத்திருந்தோம். எல்லாரும் வந்ததும், நாங்க கிளம்பினது திருப்புட்குழி. ஆனால் நாம் காஞ்சிபுரத்தின் வரதராஜரைப் பார்க்கலையே இன்னும். வரதராஜரைப் பார்த்துட்டுத் தான் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கே வந்தோம். ஆனால் வசதிக்காக் ஏகம்பனைப் பத்தி எழுதியாச்சு. அடுத்து கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!

படங்களே கொஞ்சம் தான் எடுக்க முடிஞ்சது. அதுவும் சரியா அப்லோட் ஆகலை, என்னமோ எந்தப் படமும் போடமுடியலை, ஓரளவுக்கு சிவகங்கை தீர்த்தம் படம் வந்திருக்கு, அதைப் போட்டிருக்கேன்.

5 comments:

  1. நீங்க group ஓட போனேளா? நாமா போனா இந்த details ஒண்ணும் தெரியாம மள மளநு சுத்திண்டு வந்துடரோம். தெரிஞ்சவா கூடபோனா அட்லீஸ்ட் கொஞ்சம் வரலாறு தெரிஞ்சு போகலாம்.எனக்கு படிக்கறத விடயும் கேட்கறது நன்னா மனசுல பதியும்.

    ReplyDelete
  2. //ஆனாலும் இதன் பழங்களும் வித்தியாசமான சுவையோடு இருக்கு, பழைய மரத்தின் கிளை அல்லது விதையிலிருந்து வந்ததுனு சொல்றாங்க. //

    எங்க ஊரிலேயும்தான் 16 வகை பூக்கிற பாதிரி மரம் இருந்ததாம். புராணம் சொல்லித்தான் தெரியுது. கருவறை பக்கத்திலே ஏதோ ஒரு கவசம் போட்டு என்னமோ இருக்கு. என்ன ஏதாவது இருக்கான்னு கூட யாருக்கும் தெரியாது. :-((

    ReplyDelete
  3. //என்ன ஏதாவது இருக்கான்னு கூட யாருக்கும் தெரியாது. :-((//

    ஆமாம், சரியாச் சொல்லவும் மாட்டாங்க, என்னமோ இப்படியே நிறைய விஷயங்கள் தெரியாமலே போச்சு! :(

    ReplyDelete
  4. ஜெயஸ்ரீ, இப்போக் கொஞ்ச நாட்களா இந்தச் சுற்றுலா குழுக்களோடயே போறோம். ஆனால் இதிலே என்ன அசெளகரியம்னா அவசரம் அவசரமாப் பார்த்துட்டு ஓடி வரணும், என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு ஊர் அல்லது கோயில் போறோம்னு தெரிஞ்சதும், அது பத்தின விஷயங்களைத் தோண்டிப் பார்த்துக்குவேன். ஆனால் தனியாப் போனா இந்தச் சிலைகள், சிற்பங்கள் இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்திப் பார்க்கமுடியும், தாராசுரம் கோயில், தஞ்சை கோயில் எல்லாம் தனியாத் தான் போவோம். இன்னும் அங்கெல்லாம் பார்க்க நிறையவே இருக்கு. நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் போவோம்.

    ReplyDelete
  5. முன்ன பக்தி, ஆலயம் ஐ ரொம்பவே தாங்க் பண்ணுவேன். அப்படி படித்துவிட்டு ஆர்வமா போனது தான் யாதகிரிகுட்டா, ஸ்ரீசைலம் திருமீயச்சூர், கூத்தானுர், பட்டீஸ்வரம்,திருக்கருகவூர் எல்லாம். இன்னும் அகோபிலம், சதுரகிரி, அகஸ்தியர் மலை, பானகல நரசிம்மஹ ஸ்வாமி, குக்கே சுப்ரமண்யா பாக்க ஆசை. இப்ப ப்லாக் ல யும் இன்ஃபொர்மேஷன் நிறைய இருக்கு

    ReplyDelete